இது குறித்து ஆகாஷ் ஆனந்த் நேற்று சமூக ஊடகத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் மாயாவதியின் வார்த்தைகள் தனக்கு கல்வெட்டு போன்றது என்றும் மாயாவதி முடிவை மதிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதில் கோபமடைந்த மாயாவதி, ஆகாஷை கட்சியிலிருந்து ஒரேடியாக நீக்க நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக மாயாவதி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஆகாஷின் நீண்ட பதில் வருத்தம் அளிக்கிறது. அவரது விளக்கம் அரசியல் முதிர்ச்சியை அடையாளப்படுத்துவதற்கு பதில் சுயநலத்தையும் ஆணவத்தையும் காட்டுகிறது. கட்சியின் நலனுக்காக அவர் நீக்கப்படுகிறார்’’ என கூறி உள்ளார்.
The post முக்கிய பொறுப்புகளை பறித்த நிலையில் சகோதரன் மகனை கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி appeared first on Dinakaran.
