திருட்டு நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்குகளில் அவர் வேறு எங்காவது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மேலும் 7 திருட்டு வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஞானசேகரனின் தார் ஜீப், கிண்டியில் உள்ள சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்த நிலையில், அதனை பள்ளிக்கரணை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஞானசேகரன் மீது, திருட்டு, கொள்ளை உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post சொகுசு கார்களில் சென்று 7 வீடுகளில் சுமார் 200 பவுன் நகை திருடிய ஞானசேகரன்: திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது appeared first on Dinakaran.
