குரூப் 2ஏ பணிகள் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைதேர்வு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 26ம் தேதி மாலை 5.45க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘‘ஆன்சர் கீ சேலன்ச்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குரூப் 2ஏ முதன்மை தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
