இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ஒன்றிய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழக, புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. மாற்றந்தாய் மனபான்மையுடன் ஒன்றிய பாஜக அரசு நடந்துகொள்கிறது. துப்பாக்கிச்சூடு, படகு பறிமுதல், மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிப்பதோடு இனியும் காலதாழ்த்தாமல் மீனவ சமுதாய மக்களை இலங்கை அரசின் கொடுமையில் இருந்த காக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
The post மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
