இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து 12 கிளர்ச்சியாளர்களை அழித்ததாக பாகிஸ்தானின் ஐஎஸ்பிஆர் அறிக்கை வெளியிட்டது. பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பல பயங்கரவாத நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் மீதமுள்ள கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் உறுதியை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
The post பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலி..!! appeared first on Dinakaran.