அத்துடன் சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்புடைய பள்ளி அறங்காவலர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தலைமறைவான பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி போலீசாரிடம் சரண் அடைந்தார். இதனிடையே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.