அப்போது வீட்டில் கேரட் சாப்பிட்டு விட்டு குழந்தை லத்திஷா விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பிரமிளா குழந்தையை தூக்கிக்கொண்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கேரட் சாப்பிட்டு விளையாடிய 2 வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.
