தற்போது சீமான் பயணிக்கும் பாதை என்பது அவரது ஸ்டைல். பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரன் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கை வைத்துதான் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும். விஜய் பரந்தூர் விமானம் நிலையம் தொடர்பாக ஒரு கருத்தை சொல்லி உள்ளார். அதுபற்றி ஏதாவது சரி செய்ய முடியும் என்றால் மாநில அரசு முயற்சிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையம் பணிகளை தற்போது துவக்கினாலும் பணிகளை முடிக்க 10 ஆண்டுகளாக விடும். கோமியம் குறித்து பொது வெளியில் நான் பேச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post லாப நஷ்ட கணக்கை வைத்தே கூட்டணி: சொல்கிறார் அண்ணாமலை appeared first on Dinakaran.
