இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடித்ததில், மகேஷ்குமார் அகர்வாலை தமிழக பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மத்திய அரசு பணியில் சேர வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 1994ம் ஆண்டு பிரிவை சேர்ந்த தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி.,யாக பணியாற்றிவர், பின்னர் 2001ம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்டு பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளில் இருந்தவர். சி.பி.ஐ. அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 2020ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர்.
The post ஆயுதப்படை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்: எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக நியமனம் appeared first on Dinakaran.
