இந்திய வீராங்கனைகளில் பிரியா மிஸ்ரா 2விக்கெட் எடுத்தார். அறிமுக வீராகங்கனை சாயாலி சத்காரே, டைடஸ் சாது, தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 239 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41, பிரதிகா ராவல் 89, அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் அமைத்து தந்த வலுவான அடித்தளத்தால் இந்திய அணி 34.3 ஓவரில் இலக்கை கடந்து 241 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தேஜல் ஹசாப்னீஸ் 53, ரிச்சா கோஷ் 8ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். ஆட்ட நாயகி பிரதிகா ராவல். அயர்லாந்து வீராங்கனைகள் அய்மீ மகுரி 3, ஃபிரேயா சார்ஜன்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
The post அயர்லாந்து மகளிருடன் ஓடிஐ இந்தியா அசத்தல் வெற்றி: பிரதிகா ஆட்ட நாயகி appeared first on Dinakaran.
