கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுகண்மாய் முழுகொள்ளவை எட்டியது. இதனை தொடர்ந்து கண்மாயில் இருந்து உபரிநீர் வெளியேறி வந்தது. இந்நிலையில் கண்மாய் கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. அதன் வழியாக தண்ணீர் வெளியேரத் தொடங்கியது. தொடர்ந்த அந்த வழியாக தண்ணீர் அதிக அளவில் வெளியேறியதால் சுமார் 250 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் தண்ணீர் வெளியேறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
The post சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கண்மாய் கரை உடைந்து 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.