படப்பிடிப்பு ஒத்திகையில் நடிகர் விக்ரம் காயம்

சென்னை: தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம் அடைந்ததால், அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிப்பில் அடுத்ததாக தங்கலான் படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க சொல்லியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நடைபெறும் தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.

The post படப்பிடிப்பு ஒத்திகையில் நடிகர் விக்ரம் காயம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: