லாரி மீது கார் மோதி சகோதரிகள், ஒருவர் பலி

அவிநாசி: கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (56). பில்டர்ஸ். இவரது மனைவி மகாலட்சுமி (45). இவர்களது மூத்த மகள் அபர்ணா (25). சட்டீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூர் ஐஐஎம் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். 2வது மகள் ஹேமா (23). கோவையில் உள்ள கல்லூரியில் பிஇ 3ம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக அபர்ணா நேற்று முன்தினம் விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அவரை தங்கை ஹேமா, மோனிஷ்பாபு (28) ஆகியோர் அழைத்துக் கொண்டு காரில் கோவை திரும்பி கொண்டிருந்தனர். காரை மோனிஷ் பாபு ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், 3 பேரும் உயிரிழந்தனர்.

The post லாரி மீது கார் மோதி சகோதரிகள், ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: