வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் 7 பேர் கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் திமிங்கலத்தின் எச்சம் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் முத்துக்குமார் (43) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 2 கிலோ திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முத்துக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன்(28), வினித்(27), அஜித் குமார்(25), பாண்டியன்(22), சிக்கந்தர்(22), சத்யநாராயணன்(22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: