சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ் அலுவலக சீலை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: சிவகாசியில் லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி பட்டாசுகளை லாரியில் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகாசி விஸ்வநத்தத்தில் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் வாசுகி ஐகோர்ட் கிளை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், நிறுவனத்தை முறையாக சட்டத்திற்கு உட்பட்டு நடத்தி வருகின்றேன், எனது கணவர் சோமசுந்தரம் நிர்வகித்து வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து சரக்குகள் எனது டிரான்ஸ்போர்ட் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. ரூ.6 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை விதிமீறி வைத்திருப்பதாக டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். எனவே அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ் அலுவலக சீலை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: