சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் வெளியேற்றம்..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவிகள் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த 3 மாணவிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

The post சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: