சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 35 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

 

The post சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: