ரூ.563 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம் விரிவாக்கம்


சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே அமைந்துள்ள ரூ.563 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது. தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. ஆலையை விரிவாக்கம் செய்து பிரீமியம் டயர்களை தயாரிக்க மிச்செலின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1.92 லட்சம் சதுர அடியில் இருந்து 2.06 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது ஆண்டுக்கு 6.80 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விரிவாகத்திற்கு பின் 14 லட்சம் டயர்கள் உற்பத்தியாகும். கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

1889 இல் நிறுவப்பட்ட மிச்செலின் குழுமம் 170 நாடுகளுக்கு டயர்களை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள எங்களின் 69 உற்பத்தி வசதிகளில் ஒன்றான Michelin Group குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சாலை நிலைமைகளுக்கு உள்நாட்டிலேயே டயர்களை உருவாக்குகிறது.

Michelin’s புகழ்பெற்ற பயண வழிகாட்டிகள், உலகின் சிறந்த டயர்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், பயணத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் சேர்க்கும் தகவலை வழங்குவதன் மூலம், இயக்கத்தை மேம்படுத்துவதில் Michelin குழுமத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பின் விளைவாகும்.

மிச்செலின் சகோதரர்கள் ஆண்ட்ரே மற்றும் எட்வார்ட் ஆகியோர் 1889 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த மனித மற்றும் தொழில்துறை ஒடிஸியை மேற்கொண்டனர் – இடைவிடாத கண்டுபிடிப்புகள் மூலம் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நவீன போக்குவரத்து தீர்வுகளை உருவாக்க. அப்போதிருந்து, மிச்செலின் பிராண்ட் பல தொழில்துறை மற்றும் உலகின் முதன்மையானவற்றுடன் தொடர்புடையது. முதல் பிரிக்கக்கூடிய சைக்கிள் டயர் (1891), உலகின் முதல் நடைபாதை ஓடுபாதை (1916), முதல் ரேடியல் டயர் (1946) ஆகியவை சிலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மிச்செல் நிறுவனம் பலவகையான வாகன டயர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் இந்த தொழிற்ச்சாலைகளில் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்ச்சாலையை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 1.92 லட்சம் சதுர அடியில் இருந்து 2.06 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது ஆண்டுக்கு 6.80 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விரிவாகத்திற்கு பின் 14 லட்சம் டயர்கள் உற்பத்தியாகும். கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.

The post ரூ.563 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: