கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனுக்கு சம்மன்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிமுக நிர்வாகி சஜீவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. துபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். கோவையில் உள்ள சஜீவனின் மனைவியிடம் சிபிசிஐடி போலீஸ் சம்மன் வழங்கியது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நவ.5-ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: