இந்த வகையான பாக்டீரியா வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தண்ணீர் குழாய்கள், தண்ணீரை சேகரித்து வைக்கும் தொட்டிகள், கொள்கலன்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஏதோ நேரடியாக குழாய் வாயிலாக, ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரில் இருந்து மட்டும் இந்த பாக்டீரியா மாசு இருப்பதாக நினைப்பது தவறு. நீர் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தும் சில வீடுகளிலும் இந்த பாக்டீரியா மாசு இருந்தது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மாதிரிகள் எடுக்கப்பட்டதில், பாக்டீரியா மாசு இருப்பதாக கண்டறியப்பட்ட 75% வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் இருப்பதும், அவர்களும் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்ததாக சென்னை ஐ.ஐ.டி.யின் நீர்த்தர திட்டத்தின் பாட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தெரிவித்தார். மேலும் அவர், இது போல பாக்டீரியா மாசு வராமல் இருக்க நீர் சுத்திகரிப்பு தயாரிப்பாளர்கள் வழங்கும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், தண்ணீரை ஒரு நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் குடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
The post சென்னையில் உள்ள 75% வீடுகளின் நீரில் ஈ.கோலி பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.