குருமலையில் ₹4.50 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை திறப்பு

கயத்தாறு, அக். 23: குருமலையில் ₹4.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்து வைத்தார். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருமலை கிராம மக்கள், தங்கள் ஊருக்கு பேருந்து நிறுத்தம் வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தனது மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹4.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். பணிகள் நடந்து முடிவுபெற்ற நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் வெங்கடாசலபுரம் கார்த்திக், கம்மாப்பட்டி அய்யாத்துரை, வி.பி.சிங் நகர் உத்திரக்குமார், குருமலை அருண்பாண்டி, சுந்தரேஸ்வரபுரம் குமார், ராஜாபுதுக்குடி பால்ராஜ், கயத்தாறு மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குருமலையில் ₹4.50 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: