தென்னாடர் ஊராட்சியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை வீடு, வீடாக பரப்புரை

வேதாரண்யம், மார்ச் 12: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பரப்புரை நிகழ்ச்சி தென்னடார் ஊராட்சியில் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேதாரணயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு கழகத் தலைவர் முதலமைச்சர் வழிகாட்டுதலில் வாக்குச்சாவடி வாரியாக ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடான பரப்புரை தொடங்கபட்டுள்ளது. திராவிடமாடல் அரசின் மகளிர் நலத்திட்டங்களான விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் எண்ணற்ற நலத்திட்டங்களைப் பற்றி ஒவ்வொரு வீட்டிலும் மகளிரிடம் ஸ்டாலினின் மகளிர் படையை சேர்ந்தவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளிர் உரிமை தொகையை முடக்க ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணிக்கட்சி அதிமுகவும் தீட்டிய சதியை முன்கூட்டியே அறிந்து முறியடித்து 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை முன்பணம் ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கியதோடு, தொடர உள்ள திராவிட மாடல் அரசில் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களை பயனாளிகளாக மட்டும் எண்ணாமல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பங்குதாரர்கள் என முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்பது மகளிருக்கு முதலமைச்சரின் செய்தியாக தெரிவிக்கப்படுகிறது.

வெல்லும் தமிழ்ப்பெண்கள், வீடுவீடாக பரப்புரையின் முதல் நாள் சுமார் 120 தொகுதிகளில் வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டனர் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள். அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் தான் நலத்திட்டங்களும் தொடரும். தமிழ்நாட்டு பெண்கள் முழுக்க முழுக்க திமுக பக்கமே உள்ளனர் என்பது வெல்லும் தமிழ்ப்பெண்கள் வீ டுவீடாக பரப்புரைக்கு கிடைத்துள்ள மாபெரும் ஆதரவின் மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளதாக ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்புவேலன், சண்முகப்ரியா மற்றும் மேற்குஒன்றிய பொறுப்பாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: