கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 3 செப்பேடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சித்தையா ஜெகதீசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் இணைந்து ஆய்வுக்காக அளித்தனர். செப்பேடுகளை பெற்ற தொல்லியல்துறை கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பின்னர் செப்பேடுகளில் அச்சு மை தடவி சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்துகளால் அச்சடிக்கப்பட்டிருந்த எழுத்துகளின் அச்சுகளை வெள்ளை தாள்கள் மூலமாக ஆவணமாக சேகரித்தனர். பின்னர் செப்பேடுகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து எழுத்து அச்சுக்களால், பேப்பர்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். ஆய்வின் முடிவில் முழுமையான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தெரிவிக்கும் என கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
The post மப்பேடு கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு: ஆவணங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர் appeared first on Dinakaran.