இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 18 கிராம் தங்க நகை காணாமல்போய் இருந்ததால் சுதர்சனம், வீட்டில் வேலை செய்த பெண் ஜோதிமணியை தேடியுள்ளார். அப்போது, அப்பெண் போலியான முகவரியை கொடுத்திருந்ததால், அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காந்திநகரில் தங்கியிருந்த ஜோதிமணியை நேற்று கைது செய்து நடத்திய விசாரணையில், சுதர்சனன் வீட்டில் வேலை செய்தபோது, அவரது வீட்டிலிருந்து 18 கிராம் தங்க நகைகளை திருடிச்சென்றதை ஒப்புகொண்டார். பின்னர், அவரிடமிருந்து 18 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார், இதேபோல் வேறு யாரேனும் வீட்டில் ஜோதிமணி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.