அதை ஏற்க மறுத்த நீதிபதி, வீரராகவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது, ரவுடி வீரராகவன் தனது பாதுகாப்பிற்காக கைத்துக்கி வைத்திருப்பதாகவும், இந்த துப்பாக்கி தனது நண்பர் அப்பு (எ) புதூர் அப்புவுக்கு சொந்தமானது என்று கூறி, துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, காசிமேடு காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட போலீசார், இந்த துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது சட்டவிரோதமாக வைத்திருந்ததா என விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அப்புவின் துப்பாக்கி அது என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது.
The post வழக்கு விசாரணைக்கு துப்பாக்கியுடன் நீதிமன்றம் வந்த ரவுடி appeared first on Dinakaran.