முகப்பேரில் உள்ள மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொந்தரவு அறுவை சிகிச்சை மருத்துவர் கைது

சென்னை: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் உல்லால மதுக்கர் ராவ்(58). இவர் தற்போது சென்னை வளசரவாகத்தில் தங்கி சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்ததில் நர்சுக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததால் மருத்துவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post முகப்பேரில் உள்ள மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொந்தரவு அறுவை சிகிச்சை மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: