பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சிதம்பரம், அக். 22: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புளியந்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் பாபு மகன் விக்னேஷ் (26). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிதம்பரம் சத்யா நகரை சேர்ந்த பரணிதரன் மகள் ராகவி (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது.

இருவரும் செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு நேற்று காலை வெளியேறி சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரணிதரன், இருவரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: