கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் நாளை ஆய்வு ஆட்சியர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி, அக். 18: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு நாளை(19 ம்தேதி) துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வருகை தர உள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழக அரசு உத்தரவுக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் நலத்திட்டங்கள் குறித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை 19 ம்தேதி ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு, முடிவுற்ற பணிகள், நடைபெறும் பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் விவரம், பயனாளிகள் எண்ணிக்கை, துறை வாரியாக அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்து ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த முழுமையான அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு மண்டல இணை இயக்குநர் முருகேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் நாளை ஆய்வு ஆட்சியர் பிரசாந்த் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: