மரக்காணம் அருகே பரபரப்பு 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

மரக்காணம், அக். 19: மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில். இக்கோயிலுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு, கிராம பொதுமக்கள் சார்பில் பால்குட விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது நேர்த்தி கடனை வேண்டி கோயில் உண்டியலில் பணம் போட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோயிலுக்குள் சென்று உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மற்றொரு சம்பவம்: இதுபோல் இக்கோயிலின் அருகில் உள்ளது காணிமேடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடிச்சென்று உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் மீது 2 கோயில்களின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே இரவில் 2 கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மரக்காணம் அருகே பரபரப்பு 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: