புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

 

பண்ருட்டி, அக். 16: புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விசூர் காலனி தெற்கு தெரு பெட்டி கடையில் ஆசை குமார்(37) என்பவர் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்து, 3 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: