புகழிமலை ஆனந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், அக். 17: கரூர் மாவட்டம் புகழிமலை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாதம பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. நடராஜருக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் க்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பதிவு சேர்ந்த பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அபிஷேக ஏற்பாடுகளை புகழிமலை கிரிவலம் பக்தர்கள் மற்றும் திருக்காடுதுறை மாதேஸ்வரர் கோயில் சிவனடியார்கள் செய்திருந்தனர்.  ஜவுளித் துறையானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பது, ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பது மற்றும் தொழில்துறை வீரர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை எளிதாக்குவதன் மூலம் ஜவுளித்துறையில் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

The post புகழிமலை ஆனந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: