கரூர் அருகே கடன்சுமை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

 

கரூர்: செல்லாண்டிபாளையம் அருகே கடன் சுமை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(37). கார்களுக்கு பெயிண்டிங் அடிக்கும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக கடன் சுமை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால், விரக்தியடைந்த அவர், கடந்த 12ம் தேதி காலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். மதியம் வீட்டிற்கு வந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது, தேவராஜ் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து, உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் அருகே கடன்சுமை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: