மின் மோட்டார் திருட்டு போலீசார் வழக்கு பதிவு

 

கரூர், அக் .15: கரூர் வெங்கமேடு அடுத்த காமதேனு நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (38). இவருக்கு சொந்தமான அச்சகம் இதே பகுதியில் உள்ளது. இவர், கடந்த 12ம்தேதி, வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், காமதேனு நகர்ப்பகுதியில் உள்ள தனது அச்சகத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2 மின் மோட்டார்களை காணவில்லை என தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மின் மோட்டார் திருட்டு போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: