செங்கல் சூளையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து பலி

 

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர் ஒருவர் பாம்பு கடித்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஒரிசா மாநிலம் பெர்காத் பகுதியைச் சேர்ந்தவர் சாமநிதி போய் (52). இவர், உறவினர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாங்கல் கல்மண்டபம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள குடிலில் சாமநிதி போய் தூங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக விஷம் பாம்பு கடித்துள்ளது. அவரை, மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல் சூளையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து பலி appeared first on Dinakaran.

Related Stories: