மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்

சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, வழக்கமாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், 15, 16, 17 ஆகிய தேதிகளில் மட்டும் 3 நிமிட இடைவெளியில் துரிதமாக இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பெருமழை தவிர்க்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதால் இன்று முதல் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம் போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் வரை நேரடியாக செல்லும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

ரயில் சேவை விவரம்: காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

The post மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: