ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மேம்பாலங்களில் மீண்டும் வரிசை கட்டிய கார்கள்

சென்னை: சென்னையில் இன்று மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததால், பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மேம்பாலங்களில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மிக கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. ஆனால் கடந்த கால அனுபவத்தின் காரணமாக மழை வருவதற்கு முன்பே, பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் மக்கள் வரிசையாக தங்கள் கார்களை நிறுத்தி சென்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருந்தாலும் நேற்று மழை பெய்ய வில்லை என்பதால், மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களை எடுத்துச் செல்லும்படி உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் வானிலை ஆய்வு மையம் மீண்டும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வீடுகளுக்கு எடுத்து சென்ற கார்களை நேற்று இரவு மீண்டும் வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை மேம்பாலங்களின் இரு புறங்களிலும் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டு சென்றனர்.

The post ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மேம்பாலங்களில் மீண்டும் வரிசை கட்டிய கார்கள் appeared first on Dinakaran.

Related Stories: