நூறடி சாலையில், எம்எம்டிஏ காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்பட்டது. தாழ்தள பேருந்துகளுக்குள் எளிதாக மழைநீர் புகுந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகள் நிறுத்தப்பட்டன என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்தது.
The post அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.