இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிரவார போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டு மான்வி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சிரவார போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.