பாலியல் புகார் நடிகர் ஜெயசூர்யாவிடம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா இன்று திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயசூர்யா. இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் வைத்து நடந்த ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பின்போது தன்னை நடிகர் ஜெயசூர்யா கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆலுவாவை சேர்ந்த நடிகை புகார் கூறினார். இது தொடர்பாக திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசில் ஜெயசூர்யா மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக இவர் நேற்று கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒன்றரை மணிநேர விசாரணைக்குப் பின் ஜெயசூர்யாவை போலீசார் விடுவித்தனர்.

The post பாலியல் புகார் நடிகர் ஜெயசூர்யாவிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: