கொச்சியில் காரில் சென்றபோது பைக்கை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற நடிகர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நாத் பாசி. இவர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இவர் போதைக்கு அடிமையானவர் என்று ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள ஒரு 7 நட்சத்திர ஓட்டலில் பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் நடத்திய போதை பார்ட்டியில் நடிகர் நாத் பாசியும், நடிகை பிரயாகா மார்ட்டினும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடிகர் நாத் பாசி சென்ற கார் மட்டாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த முகம்மது பஹீம் என்ற வாலிபரின் பைக்கில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

The post கொச்சியில் காரில் சென்றபோது பைக்கை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற நடிகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: