தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க கோரிய மனு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெங்களூருவை சேர்ந்த ஷசாங்க் தரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “ அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால் மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். இதுபோன்ற இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் இலவசங்கள் என்பது நமது கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஆகியவை வழங்குவது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதால், அவ்வாறு கொடுக்கப்படும் இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தார்.

The post தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க கோரிய மனு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: