குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: கோதுமை ரூ.150 அதிகரித்து ஒரு குவிண்டால் ரூ.2,425ஆக நிர்ணயம்!!

டெல்லி: கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுகு மற்றும் கொண்டை கடலைக்கான எம்.எஸ்.பி. முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 ஆகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரேப்சீட் மற்றும் கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ.300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ.210 உயர்த்தப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700க்கு கொள்முதல் செய்யப்படும். பார்லி குவிண்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: கோதுமை ரூ.150 அதிகரித்து ஒரு குவிண்டால் ரூ.2,425ஆக நிர்ணயம்!! appeared first on Dinakaran.

Related Stories: