மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் காங். பார்வையாளர்கள் நியமனம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல்களுக்கான காங்கிரஸ் பார்வயைாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் மூத்த ஒருங்கிணைப்பாளர்களாக முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் கொங்கன் பகுதிக்கு அசோக் கெலாட், பரமேஷ்வரா, மராத்வாடாவுக்கு சச்சின் பைலட், உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விதர்பா(அமராவதி மற்றும் நாக்பூர்) பகுதிக்கு பூபேஷ் பாகேல், சரஞ்சித் சிங் சன்னி மற்றும் உமாங் சிங், வடக்கு மகாராஷ்டிராவின் மூத்த பார்வையாளர்களாக சையத் நசீர் ஹூசைன் மற்றும் டி.அனசுயா சீதக்கா ஆகியோரும், மேற்கு மகாராஷ்டிராவுக்கு டி.எஸ்.சிங்தியோ மற்றும் எம்.பி.பாட்டீல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் பேரவை தேர்தலுக்கான மூத்த பார்வயைாளர்களாக தாரீக் அன்வர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பாட்டி விக்ரமார்கா மல்லு நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் காங். பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: