திருட்டில் ஈடுபட்டவர் கைது

தென்கனரா: தென்கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஹமீது என்கின்ற ஜாபர் ஹமீது என தெரியவந்தது.

இவர் தென்கனரா மாவட்டம் பண்ட்வால் டவுன், கடப்பா, புத்தூர், வேணூர் புஞ்சலக்கட்டை மங்களூரு டவுன் பந்தர், ஹாசன் மாவட்டம் பேலூர் உடுப்பி மாவட்டம் படுபித்ரி, சிக்கமகளூரு மாவட்டத்திலுள்ள மூடிகெரே, கேரளா மாநிலம் மற்றும் மடிக்கேரி பகுதிகளில் 34 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்து வந்தார் என தெரியவந்தது. பெல்தங்கடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருட்டில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: