சுகாதார துறையில் முழுமையாக கன்னடம் பயன்படுத்த வேண்டும்: சுகாதார துறை ஆணையர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநில சுகாதார துறையில் செயல்பாடுகள் அனைத்தும் கன்னடமொழியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு துறையில் முழுமையாக கன்னடம் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசின் அனைத்து துறையிலும் கன்னடம் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கர்நாடக மாநில சுகாதார துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில், மாநிலத்தில் சுகாதார துறையின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக கன்னட மொழியில் இருக்க வேண்டும்.

கடித போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் கோப்புகள் அனைத்தும் கன்னட மொழியில் இருக்க வேண்டும். துறைகள் இடையிலான கடித பரிமாற்றம் செய்யும்போது, முதலில் கன்னட மொழியிலும் பின் ஆங்கில மொழியிலும் இருக்க வேண்டும். சுகாதார துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் கன்னடம் கட்டாயம் தெரிய வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் டாக்டர், நர்ஸ்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கன்னடம் கற்பித்தல் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.

The post சுகாதார துறையில் முழுமையாக கன்னடம் பயன்படுத்த வேண்டும்: சுகாதார துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: