பி.எட்., கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு

சென்னை: பி.எட். நேரடி கலந்தாய்வு கனமழை காரணமாக வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முதல்நாளான நேற்று கலந்தாய்வு தொடங்கியது. முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியின மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றன.

இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு, கன மழை எச்சரிக்கை காரணமாக, வருகிற 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பி.எட்., கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: