17 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு

சென்னை: தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலைகொண்டிருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post 17 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: