செங்குன்றம் அருகே கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், கோனிமேடு 400 அடி சாலையில், செங்குன்றம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 பேரை, போலீசார் தடுத்து நிறுத்தியபோது அவர்கள் நிற்காமல் தப்பிச் சென்றனர். உடனே, போலீசார் அரை கிமீ தூரம் விரட்டிச்சென்று 2 பேரையும் மடக்கிப் பிடித்து, பைக்கில் சோதனை செய்தபோது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (19), அலமாதி அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (19) ஆகியோர் என்பது தெரிய வந்த்து. 2 பேரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதனை சிறுசிறு பொட்டலங்களாக விற்பனை செய்து வந்தனர். இதனையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post செங்குன்றம் அருகே கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: