திருப்பதி லட்டு சர்ச்சை – அறிக்கை கோரினார் ஜே.பி.நட்டா

டெல்லி: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிக்கை கோரினார். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனிடையே திருப்பதி லட்டு விவகாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் இன்று மாலைக்குள் விரிவான விவரங்களுடன் அறிக்கை தர ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post திருப்பதி லட்டு சர்ச்சை – அறிக்கை கோரினார் ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.

Related Stories: