திருச்சுழி குண்டாற்றில் பிட்டு திருவிழா

திருச்சுழி, செப்.14: திருச்சுழி துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயில் பிட்டுத் திருவிழா குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சுழி துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் சுவாமி கோயில் பிட்டுத் திருவிழா திருச்சுழி குண்டாற்றில் நேற்று நடைபெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு, சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.

The post திருச்சுழி குண்டாற்றில் பிட்டு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: